பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)

குலம்: அகமுடையார்

குரு: சட்டை முனி

ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:



  • சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்

  • சுந்தரானந்தர் சோதிட காவியம்
  • சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
  • சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
  • சுந்தரானந்தர் கேசரி
  • சுந்தரானந்தர் மூப்பு
  • சுந்தரானந்தர் தண்டகம்
  • சுந்தரானந்தர் காவியம்
  • சுந்தரானந்தர் சுத்த ஞானம்
  • சுந்தரானந்தர் தீட்சா விதி
  • சுந்தரானந்தர் பூசா விதி
  • சுந்தரானந்தர் அதிசய காரணம்
  • சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)


பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)


சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)


தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)


பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)


சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.


மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.






1


மூவுலகை காத்தருளும் ஈசா உந்தன்
முடிவுயில்லா திருவடியை பணிந்து போற்றி
மேவுமொரு பராபரையின் அருளை கொண்டு
மொழிந்திடுவோம் பிருகுயான் சீவ சூட்சம்

2


சூட்சமாய் எங்களது குடிலம் தொட்டு
சுகப்படுத்தும் பூசைவிதி காலம் தன்னை
நுட்பமாய் XXXXXXXXX மகன் தனக்கு
நடப்புவழி ஆசியதை சித்தம் கொண்டான்


3


கொண்டவிதம் மாந்தர்களும் அறியும் வண்ணம்
குருவாக யாமிருந்து விளம்பி வாறோம்
விண்ணமற சித்தர்களை போற்றி நின்று
வித்தரிக்க ஆன்மபலம் இம்மாந்தர்கள் அறிய

4


அரியபல பொதுஞானம் அறிவுரைகள்
அகமகிழ்ந்து இக்காலம் விடயம் கூற
குறிப்பான தனுர் திங்கள் ஏகாதசியும்
கோமகளின் வால்பிடித்து பித்ருக்கள் யாவும்


5


பிதுர்கள்யாவும் திருப்திக்க லோகத்தோர்கள்
பூரணமாய் நிச்சயித்த அனுட்டிப்பாலே
மாதவனாம் ஆசிபடவும் அரண் அயனின்
மலர்பாதங்கள் நாடிடவும் பொருட்டு எங்கள்


6


எங்களது பூசை யதை நிச்சயித்தோம்
எதிர் நோக்கா வந்தாலும் அவர்களுக்கு
மங்களங்கள் தான் அளித்து மறுசுகமும்
மகத்துவமும் பெறும்பொருட்டு திங்கள்தோறும்


7


திங்கள்தோறும் குருமார்க்க நியதி கொண்டோர்
தனக்குரிய ஆசிரமத்தில் நினைவு கொண்டு
மங்களமாய் சங்கமித்து தியானம் கொள்ள
மொழியுரைத்தோம் இயமம்யதும் கடந்து ஞான


8


ஞானமெனும் ஆத்துமநிலை பொலிவும் ஒங்க
ஞானமதின் புருடர்களுக்கு ஜெனன காலம்
தான்என்ற எல்லையில்லை அவர்கள் சிந்தை
தனைகொள்ள விண்மீனும் கடை மீனாய்


9


மீனதிலே கலசமதின் திங்கள் தன்னில்
முக்கியமாய் சுந்தரனந்தன் தன்னை நன்றாய்
ஊனமில்லா நினைவுறுத்தி பூசை கொள்வீர்
உத்தமமாய் நெடியதொரு குருபக்தி கொண்டான்


10


கொண்டமகன் சட்டைமுனி ஞானம் பெற்று
குருவினது போதனைகள் யாவும் பெற்று
விண்ணமிலா விட நிவாரணம் வாக்கியஞானம்
விளம்பநல் கோள்ஞானம் முப்பு ஞானம்


11


ஞானமதாம் கிருஷிகளும் மூலி சூட்சம்
ஞால தீட்சை பூசையதாம் விதியது செய்தான்
மோனமென்ற நிலையிவன் நின்றால் கூட
முக்கியமாய் உயிர்கள்எல்லாம் உய்யும் பொருட்டு


12


பொருட்டுமே வல்லபங்கள் செய்ததாலே
பூரணமாய் அந்நாமம் பெற்றார் திண்ணம்
குருமுனியின் அருள்பெற்று ஞான லிங்கம்
காண நலம் சதுரகிரியில் செய்தானப்பா


13


அப்பனே அவனுக்குரிய மூலம் தன்னை
அகம்நிறுத்த வல்லதொரு மூலம் அப்பா
செப்பவே ஒம் XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சீர்பெற்ற ஓம் சுந்தரனந்தன் எனும் வல்லபனே


15


வல்லபனே என்றழைத்து சோதி கொண்டால்
வந்திடுவார் தங்கமயமான ஆனந்தனாக
நல்லதொரு விழாப்பொருட்டு மாந்தர் சூழ
நலமான அன்னமுடன் விடமுறிவான


16


விடமுறிவான ஔடதங்கள் ஈய நன்மை
வாக்குப்படி நாகமதின் பாம்பு போன்ற
விடமெல்லாம் வசியமது ஆகும் அப்பா
வீர்யமாய் லோகத்தோரின் அறியா பீடை


17


பீடையெல்லாம் முறிக்கவே சித்தம் கொண்டார்
பிசகில்லா வரவேற்று ஆசி கொள்வீர்
சோடை யில்லா கூடலதனின் நாதனம்மை
சீர்பெற்ற அழகனவன் ஆசி நன்றாய்


18


நன்றான #அகமுடையான் என்று சித்தர்
நீடுழி குலபந்தம் கொண்டார்கள் அப்பா
முன்னம்பல ஞானவழி கொண்ட சங்கமம்
மொழிந்தோமே சீவமதாம் சூட்சம் முற்றே




(நன்றி: ஹரி மணிகண்டன், சதானந்தா சுவாமிகள் தளம்)