'தமிழவேள்' வே.உமாமகேசுவரன் பிள்ளை! (07.05.1883 - 09.05.1941)


1883ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் "கருந்திட்டைக்குடி" எனும் கரந்தை கிராமத்தில், வேம்பப்பிள்ளை - காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

அன்றைய காலக்கட்டங்களிலேயே சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

1911ம் ஆண்டு மே 14ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக வே.உமாமகேசுவரன் பிள்ளை பொறுப்பேற்றார்.

கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

1915ம் ஆண்டில் "தமிழ்ப்பொழில்" என்னும் மாத இதழை தொடங்கி, தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார்.

1919ம் ஆண்டிலேயே தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி, விவாகம் என்ற வட சொற்களுக்குப் பதில் திருமகன், திருவாட்டி, செல்வன், செல்வி, திருமண விழா என்னும் சொற்களை முதன்முதலில் கையாண்டார்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற அருஞ்சொற்களைத் தமிழுக்குத் தந்தார்.

1922 ஆம் ஆண்டிலேயே தமிழுக்கென தனியே ”தமிழ்ப் பல்கலைக் கழகம்” வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச்செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றினார்.

நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் ”தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலாக தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தினார்.

1928 ல் கரந்தை தமிழ் சங்கத்தின் சார்பில் கட்டணம் இல்லா மருத்துவமனையை தொடங்கினார்.

1937ம் ஆண்டில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, அதனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தும், தீர்மானம் இயற்றியும் களத்தில் இறங்கிப் போராடினார்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான ”நீதிக்கட்சி” தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தார்.

இவர் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராய் இருந்த காலத்தில் தொடக்க பள்ளிகள் நாற்பதாய் இருந்தது எண்ணிக்கையை நூற்றி எழுபதாக உயர்ந்தது தஞ்சையில் பல தீவு கிராமங்களை இணைக்க இவர் கட்டிய பாலங்கள் இன்றுவரை பயன் பாட்டில் உள்ளன.

அனைத்து தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்த தொண்டை போலவே, முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து பல சலுகைகளை இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பெற காரணமாய் இருந்த எங்கள் முன்னோடி 'தமிழவேள்' வே.உமாமகேசுவர பிள்ளைக்கு எம் புகழ் வணக்கம்!


யார் கள்ளர்? யார் மறவர்? என்ற பாடங்களையெல்லாம் நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. அகமுடையாருக்கான வரலாற்றை மீட்டெடுப்பது; அதை ஆவணப்படுத்துவது; மக்கள் தொகை அடிப்படையிலான அகமுடையாருக்கான பிரதிநிதித்துவ அரசியலை உருவாக்குவது. தேவர், சேர்வை, முதலியார், பிள்ளை, உடையார், நாயகர் போன்ற பல்வேறு பட்டங்களால் சிதறிக்கிடக்கும் அகமுடையார்களை ஒருங்கிணைப்பது; இப்படியாக எங்களுக்கான பாதையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.

ஆனால், தலா மூன்று மாவட்டங்களில் வாழும் கள்ளரும், மறவரும் தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழும் அகமுடையார்கள் யாரென்று இணையமெங்கும் பாடமெடுத்து கொண்டிருக்கின்றனர். உங்கள் அடையாளத்தோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள். இந்த பட்டமுள்ளவர்களே அகமுடையாரென்றும், இந்த பகுதியிலுள்ளவர்களே அகமுடையாரென்றும் புலம்பிக்கொண்டிருக்காமல், உங்களுக்கான அடையாளத்தை வெளியுலகுக்கு தயக்கமில்லாமல் சொல்லப் பழகுங்கள். எல்லா இடங்களிலும் அகமுடையார்களை இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என்று போலியாக கட்டமைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த கள்ளர், மறவரின் எண்ணிக்கையை சேர்த்தாலும் அகமுடையார்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல. அது தனித்த பேரினக்குழு. அந்த பேரினக்குழுக்குள், ராஜகுலம், ராஜவாசல், ராஜபோஜ, கோட்டைப்பற்று, இரும்புத்தலை, கீழ்மன்று, மேல்மன்று, ஐவளிநாடு, பதினோறுநாடு, பில்லூர்நாடு, நாட்டுமங்கலம், புண்ணியரசுநாடு, கலியன், சானி, தொழுவ என பல உட்பிரிவுகள் உண்டு. அகமுடையார் எப்போதுமே தனித்து இயங்கக்கூடிய ஆண்வழி சமூகம். எங்களை மற்ற சாதிகள் நட்பு அடிப்படையில் பார்க்கலாமே ஒழிய, உறவு அடிப்படையில் பார்க்க கூடாது. அகமுடையார்களான நாங்கள், மாவலி வேந்தன் வழி வந்த வாணர் குலம். அகம்படவன், அகம்படி என்றும் எங்களுக்கு தனித்த பல அடையாளங்கள் உண்டு. எனவே, எங்களை மற்ற சாதியினர் உரிமை கோரும் கீழ்த்தரமான போக்கை கைவிடுங்கள்.


வாண ஆதி அரச அகமுடையார் உறவுகளே,

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் தொகுதியிலும் அகமுடையார்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரே அளவிலான பெரும்பான்மையாகவே இருக்கின்றது. இரு தொகுதிகளிலும் வெற்றித்தோல்விகளை நிர்ணயிக்கும் சக்திகளாக அகமுடையாரே இருக்கின்றனர்.

லெட்டர் பேடு அமைப்புகளை சேர்ந்த யாரோ நான்கைந்து பேர் நாங்கள் தான் ஒட்டுமொத்த அகமுடையார் அரசியலின் அடையாளமெனச் சொல்லி தினகரனின் கள்ளர் மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை எந்த அகமுடையாரும் ஏற்க போவதில்லை.

அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸின் மோதிமுகவும், தினகரனின் கமமுகவும் கள்ளரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. நாம் தமிழர் மற்றும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அகமுடையாரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அகமுடையார் அமைப்பு என சொல்லிக்கொள்ளும் எந்த தலைவனும் கமமுகவையோ. மோதிமுகவையோ ஆதரிக்கவே மாட்டான். மாறாக இனத்திற்கு துரோகம் செய்பவனை தனக்கான தலைவனாக யாரும் கொண்டாடுவதில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட துரோகிகளை கொண்டாடும் ஒவ்வொரு அகமுடையானின் பிறப்பும் சந்தேகத்துக்குரியதே.

சூலூர் தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்க கூடிய சாதி அகமுடையார்களே. ஆனால், இல்லாத சாதியான முக்குலத்தோர் தான் சூலூரில் வாழ்கின்றனரென வரலாற்று திருடர்கள் இணையத்தில் வாந்தியெடுத்து கொண்டிருக்கின்றனர்.

முக்குலத்தோர் என்றோ, தேவர் என்றோ எந்த சாதியும் இங்கில்லை என்பதே அரசு ஆவணங்கள் படியான உண்மை. தேவர் என்பது அகமுடையாருக்கான பட்டங்களில் ஒன்று. தேவர் என்ற பட்டம் டெல்டாவில் அகமுடையாரை குறிப்பது போலவே, கொங்குவிலும் அகமுடையார்களையே குறிக்கிறது. கொங்கு பகுதியில் வாக்கு வங்கியே இல்லாதவர்கள், முக்குலத்தோர் என்ற முகமூடியோடு, அகமுடையார் முதுகில் அரசியல் சவாரி செய்ய நினைக்கின்றனர். இனி அந்த பித்தலாட்டமெல்லாம் தமிழக அரசியலில் எடுபடாது.


வாண ஆதி அரச மரபிரான அகமுடையார் உறவுகளே!

மதுரை மாவட்டத்தில் ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரும்பான்மை சமூகம் அகமுடையார் தான். ஆனால் அங்கே ஓர் அகமுடையாருக்கு கூட அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து சட்டமன்றத்தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அகமுடையாரே பெரும்பான்மை சமூகம். ஆனால், முக்குலத்தோர் என்ற போலியான அரசியலால், கள்ளர்களே மதுரை மாவட்டதில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான சிறிய அரசியல் கணக்கீடுகளை கீழே பார்ப்போம்.

மதுரை மாவட்ட சட்டமன்றத்தொகுதிகள்:

மதுரை கிழக்கு - மூர்த்தி (அம்பல கள்ளர்)

மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ (பிறமலை கள்ளர்)

மதுரை வடக்கு - இராஜன் செல்லப்பா (பிறமலை கள்ளர்)

திருப்பரங்குன்றம் - லேட். ஏ.கே.போஸ் (பிறமலை கள்ளர்)

திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார் (மறவர்)

சோழவந்தான்(தனி) - கே.மாணிக்கம் (பள்ளர்)

மதுரை மத்தி - பி.டி.ஆர். பா.தியாகராஜன் (தொண்டை மண்டல வேளாளர்)

மதுரை தெற்கு - சரவணன் (செளராஷ்ட்ரா)

மேலூர் - பெரிய புள்ளான் (முத்தரையர்)

உசிலம்பட்டி - நீதிபதி (பிறமலை கள்ளர்)

இது தவிர, 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மதுரையில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்:

அதிமுக - வி.வி.ஆர்.இராஜ் சத்யன் - பிறமலை கள்ளர்

அமமுக - டேவிட் அண்ணாதுரை (மறவர்)

கம்யூனிஸ்ட் - சு.வெங்கடேசன் (நாயுடு)

இதுதான் மதுரை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை. மதுரை மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகமான அகமுடையாருக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியோ, நாடாளுமன்றத் தொகுதியோ கூட ஒதுக்கப்படவில்லை. ஏ.கே.போஸ் மறைவுக்கு பிறகு காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கூட அஇஅதிமுக, அமமுக சார்பில் பிறமலை கள்ளர் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக சார்பில் மட்டுமே பெரும்பான்மை சமூகமான அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த மருத்துவர் சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார்.

முக்குலத்தோர் என்ற போலியான இந்த உள்ளரசியலை புரிந்து கொள்ளாததால் தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. இது மதுரைக்கு மட்டுமில்லை; ஒட்டுமொத்த தமிழ்நாடெங்கும் அரசியலில் அகமுடையாருக்கு இதே நிலைமை தான். இனியாவது புரிதல் கொண்டு, எழுச்சியோடு அகமுடையார் பேரினம் அரசியலில் மீண்டெழட்டும். அதற்கான காலம் இப்போது தான் கனிந்திருக்கிறது; அகமுடையார் இளையோர்களே, இனியாவது நாம் இதை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். நமக்கென அரசியல் பாதையை வலுவாக உருவாக்குவோம்.



அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா'வில், மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு முழுபக்க புகழஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி. இதுபோலவே, அவர்களை தெய்வமாக வணங்கும் அகமுடையார்களுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் அரசாங்க அமைப்புகளில் பதவிகளையும், தேர்தல் காலங்களில் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அகமுடையார் வேட்பாளர்களையும் அறிவியுங்கள். அது போதும். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, அகமுடையார்களை புகழ்ச்சிக்கே அடிமையாக்குவீர்கள்?



வாணஆதிஅரசர்களான அகமுடையார் உறவுகளே!

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் சேர்வை பட்டம் என்பதால், அவரை அகமுடையார் என்றே நினைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போலவே இன்றைய முதல்வர்களும் நினைத்துவிட போகின்றனர். நத்தம் விஸ்வநாதன், வல்லம்பர் சாதியை சேர்ந்தவர்; ஆனால், பட்டம் சேர்வை. இந்த பட்டத்தை மட்டும் வைத்து அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் தொகுதியான திருப்பரங்குன்றத்தில் இவரை வேட்பாளாராக களமிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, பட்டத்திற்கும், சாதிக்கும் வித்தியாசம் தெரியாமல் நத்தம் விஸ்வநாதனுக்கு வாக்களியுங்களென களப்பணி செய்ய முன்வந்து விடாதீர்கள்.




நாடாளுமன்றத் தேர்தல்:

இராமநாதபுரம்:
பொன்.கரு.ரஜினிகாந்த் அகமுடையார் (அ.இ.த.அ.ம.க) - இரட்டை மின்கம்பம்
ஜெயபாண்டியன் (சுயேட்சை) - டிராக்டர்

விருதுநகர்:
மு.தங்கப்பாண்டியன் (சுயேட்சை) - தலைக்கவசம்

தஞ்சாவூர்:
என்.ஆர்.நடராஜன் (த.மா.கா) - ஆட்டோ

வேலூர்:
ஏ.சி.சண்முகம் (பு.நீ.க) - இரட்டை இலை

சிவகங்கை:
வே.சக்திப்பிரியா (நா.த.க) - விவசாயி

மதுரை:
எம்.அழகர் (ம.நீ.ம) - டார்ச் லைட்

திருவண்ணாமலை:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) - இரட்டை இலை
சி.என்.அண்ணாதுரை (திமுக) - உதயசூரியன்
ஆர்.அருள் (ம.நீ.ம) - டார்ச் லைட்

கள்ளகுறிச்சி:
பொன்.கௌதம் சிகாமணி (திமுக) - உதயசூரியன்

திருப்பெரும்புதூர்:
டி.ஆர்.பாலு (திமுக) - உதயசூரியன்
தாம்பரம் நாராயணன் (அமமுக) - பரிசுப்பெட்டகம்

சட்டமன்ற இடைத்தேர்தல்:

தஞ்சாவூர்:
மோகன் கார்த்தி (நா.த.க) - விவசாயி

திருவாரூர்:
அருண் சிதம்பரம் (ம.நீ.ம) - டார்ச் லைட்

சோளிங்கர்:
அசோகன் (தி.மு.க) - உதயசூரியன்

பாப்பிரெட்டிப்பட்டி:
சதீஷ் (நா.த.க) - விவசாயி

திருப்போரூர்:
பெ.மணிகண்டன் (சுயேட்சை) - சாவி


(பி.கு: மேலும் சிலரது பெயர்கள் இணைக்கப்படக்கூடும்)