வாண ஆதி அரச அகமுடையார் உறவுகளே,

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் தொகுதியிலும் அகமுடையார்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரே அளவிலான பெரும்பான்மையாகவே இருக்கின்றது. இரு தொகுதிகளிலும் வெற்றித்தோல்விகளை நிர்ணயிக்கும் சக்திகளாக அகமுடையாரே இருக்கின்றனர்.

லெட்டர் பேடு அமைப்புகளை சேர்ந்த யாரோ நான்கைந்து பேர் நாங்கள் தான் ஒட்டுமொத்த அகமுடையார் அரசியலின் அடையாளமெனச் சொல்லி தினகரனின் கள்ளர் மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை எந்த அகமுடையாரும் ஏற்க போவதில்லை.

அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸின் மோதிமுகவும், தினகரனின் கமமுகவும் கள்ளரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. நாம் தமிழர் மற்றும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அகமுடையாரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அகமுடையார் அமைப்பு என சொல்லிக்கொள்ளும் எந்த தலைவனும் கமமுகவையோ. மோதிமுகவையோ ஆதரிக்கவே மாட்டான். மாறாக இனத்திற்கு துரோகம் செய்பவனை தனக்கான தலைவனாக யாரும் கொண்டாடுவதில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட துரோகிகளை கொண்டாடும் ஒவ்வொரு அகமுடையானின் பிறப்பும் சந்தேகத்துக்குரியதே.

சூலூர் தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்க கூடிய சாதி அகமுடையார்களே. ஆனால், இல்லாத சாதியான முக்குலத்தோர் தான் சூலூரில் வாழ்கின்றனரென வரலாற்று திருடர்கள் இணையத்தில் வாந்தியெடுத்து கொண்டிருக்கின்றனர்.

முக்குலத்தோர் என்றோ, தேவர் என்றோ எந்த சாதியும் இங்கில்லை என்பதே அரசு ஆவணங்கள் படியான உண்மை. தேவர் என்பது அகமுடையாருக்கான பட்டங்களில் ஒன்று. தேவர் என்ற பட்டம் டெல்டாவில் அகமுடையாரை குறிப்பது போலவே, கொங்குவிலும் அகமுடையார்களையே குறிக்கிறது. கொங்கு பகுதியில் வாக்கு வங்கியே இல்லாதவர்கள், முக்குலத்தோர் என்ற முகமூடியோடு, அகமுடையார் முதுகில் அரசியல் சவாரி செய்ய நினைக்கின்றனர். இனி அந்த பித்தலாட்டமெல்லாம் தமிழக அரசியலில் எடுபடாது.